இலங்கையில் 10 வௌிநாட்டவர்களுக்கு ஆயுள் தண்டனை.!

0
183

10 வெளிநாட்டவர்களுக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

2016 ஆம் ஆண்டு 146 கிலோகிராம் ஹெரோயின் வைத்திருந்தமை மற்றும் கடத்தியதற்காக குறித்த 10 வெளிநாட்டவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

இவ்வாறு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனைவரும் ஈரானியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.