கொழும்பு – கண்டி பிரதான வீதியின் மாவனெல்லை, பல்பாத பகுதியில் இன்று (09) மாலை 3.30 மணியளவில் இரண்டு பேருந்துகள் மற்றும் லொறியும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில், லொறியின் உதவியாளர் உயிரிழந்தார்.
இந்த விபத்தில் லொறியில் பயணித்த மற்றொரு நபரும், இரண்டு பேருந்துகளிலும் பயணித்த சில பயணிகளும் காயமடைந்து கேகாலை மற்றும் மாவனெல்லை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கண்டியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த லொரியொன்றின் பிரேக் செயலிழந்ததன் காரணமாக, உதுவன்கந்தை இறக்கத்தில் பயணித்துக்கொண்டிருந்த போது, முன்னால் சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்தின் பின்பக்கத்தில் மோதியுள்ளது.
லொறி மோதிய வேகத்தில் அந்த இ.போ.ச பேருந்து, தனக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்துடன் மோதி, பின்னர் ஒரு மதகில் மோதி நின்றது.
அதேநேரம், முன்னால் சென்ற தனியார் பேருந்து விபத்தின் வேகத்தில் தள்ளப்பட்டு அருகில் இருந்த வயலுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் பூண்டுலோயாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்திலிருந்த பயணிகளே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.














