லண்டனில் கடந்த 30 ஆம் திகதி இடம்பெற்ற கத்திக்குத்தில் யாழ்ப்பாணம் – வடமராட்சி கரவெட்டி பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் நேற்று 03 ஆம் திகதி புதன்கிழமை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
திருமணம் செய்து ஒரு வருடமான நிலையில் குறித்த துயரச்சப்பவம் இடம் பெற்றுள்ளது.
உயிரிழந்த இளம் குடும்பஸ்தரின் சகோதரியின் திருமணம் கடந்த 22 ஆம் திகதி இடம் பெற்றுள்ளது.
கறுப்பின இளைஞர்கள் இக்கொலையுடன் தொடர்புடையவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் இராமச்சந்திரன் ஜெயந்தன் வயது 32 என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
இச் சம்பவம் தொடர்பாக லண்டன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.












