திருகோணமலை ஹொரவ்பொத்தானை பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..
மஹதிவுல்வெவ பகுதியில் இருந்து தம்பலகாமம் நோக்கி ஆடை தொழிற்சாலைக்கு சென்ற பஸ்ஸுடன் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த இளைஞன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர் 19 வயதான எஹியா உல்முதீன் சஹீல் அஹமட் என தெரியவருகின்றது.
உயிரிழந்தவரின் சடலம், திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. விபத்து தொடர்பிலான விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.














