நீச்சல் தடாகத்தில் மூழ்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு.!

0
65

சிகிரியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அவுடங்காவ பகுதியில் ஹோட்டல் ஒன்றிலுள்ள நீச்சல் தடாகத்தில் மூழ்கி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் களனி – தலுகம பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுவனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுவன் தனது பெற்றோருடன் நீச்சல் தடாகத்தில் நீராடியபோது இந்த சம்பவம் நேர்ந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சடலம் தம்புள்ளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சிகிரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.