10 கோடி ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது.!

0
30

100 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள குஷ் போதைப்பொருள் தொகையுடன் இந்திய பிரஜை ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் இன்று (05) காலை சுமார் 7.45 மணியளவில் ஏர் இந்தியா விமானம் AI-277 மூலம் இந்நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.

குறித்த நபரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 10.75 கிலோகிராம் எடையுள்ள குஷ் போதைப்பொருளின் மொத்த மதிப்பு 105 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

விமான நிலைய சுங்க வளாகத்தில் சமீபத்தில் நிறுவப்பட்ட அதிநவீன ஸ்கேனரைப் பயன்படுத்தி இந்தப் குஷ் போதைப்பொருள் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.