பொத்துவில் பகுதியில் சுற்றுலா சென்ற பேரூந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு.. வீடியோ.!

0
76

பொத்துவில் பகுதியில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

கோமாரி பகுதியில் பாலம் ஒன்றில் பேருந்து மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், விபத்து சம்பவித்த பேரூந்தில் சுமார் 52 பேர் பயணித்ததாகவும் அவர்களில் பெரும்பாலானவர்கள் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவும் அவர்கள் அனைவரும் சகோதர இனத்தை சேர்ந்த சிங்கள மொழி பேசுகின்ற ஒரே குடும்பத்து உறவுகள் என தெரிவிக்கப்படுகிறது. அம்பாறையிலுள்ள பௌத்த விகாரையை வழிபட்டுவிட்டு அறுகம்பை செல்லும் வழியிலே விபத்தில் சிக்கிக் கொண்டுள்ளனர்.

காயமடைந்தவர்களை துரிதமாக வைத்தியசாலையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

கெப்பட்டிபொலவிலிருந்து அறுகம்பைக்கு சுற்றுலா சென்ற பேருந்தே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளது.

சாரதியின் தூக்கக் கலக்கமே விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது