கொலண்டிலிருந்து யாழ்ப்பாணம் வந்திருந்த நிலையில் வாந்தி எடுத்த குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் கந்தர் மடம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிவலிங்கம் ஜெயலட்சமி (வயது 61) என்ற மூன்று பிள்ளைகளைகளின் தாயாராவார்.
மேற்படி குடும்பப் பெண் கந்தர் மடத்தில் தங்கி இருந்த நிலையில் நேற்று வெள்ளிக் கிழமை அதிகாலை வாந்தி எடுத்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்த போதும், சில மணித்தியாலங்களில் அவர் உயிரிழந்துள்ளார்.
இம் மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணை மேற்கொண்டார். சாட்சிகளை யாழ்ப்பாண பொலிஸார் நெறிப்படுத்தினர்.