திருமணமாகி 3 மாசம் தான் ஆகுது.. அதுக்குள்ள இன்னொருத்தியா..? ஆடிப்போன மனைவி..! கடைசியில் நடந்த சோகம்.!

0
74

இந்தியாவின் கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டத்தை சேர்ந்த சிவானந்தா படிகார் (35) என்பவருக்கு ஜெயஸ்ரீ (30) என்ற பெண்ணுடன் கடந்த மே மாதம் 21ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. சிவானந்தா ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், அவருக்கு திருமணமான பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இந்த விவகாரம் தெரிந்து, ஜெயஸ்ரீ தனது கணவரை கண்டித்துள்ளார். இதனால், கணவன் – மனைவி இடையே கடும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, ஜெயஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரின் பெற்றோரை தொடர்பு கொண்டு சிவானந்தா தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து, அங்கு வந்த போலீசார், ஜெயஸ்ரீயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால், ஜெயஸ்ரீயின் பெற்றோர் சிவானந்தா தான், தங்களது மகளை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டதாக போலீசாரிடம் புகாரளித்தார். அதன்பேரில், போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.C

34 வயதுக்குப் பிறகு, பெண்கள் ஏன் தவறான உறவில் ஈடுபடுகிறார்கள்..? இதற்கான சரியான காரணம் உங்களுக்கு தெரியுமா..?