மாமியாரை போட்டுத்தள்ளிய மருமகன் கைது.!

0
30

தனது மாமியாரைக் கழுத்து நெரித்துக் கொலை செய்த மருமகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் கொலைச் சம்பவம் இரத்தினபுரி – டிப்போ சந்தி பகுதியில் உள்ள வீடொன்றில் ஞாயிற்றுக்கிழமை (03) இடம்பெற்றுள்ளது.

74 வயதுடைய பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார் என்று இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது….

இரத்தினபுரி – டிப்போ சந்தி பகுதியில் உள்ள வீடொன்றில் சடலம் ஒன்று கிடப்பதாக இரத்தினபுரி பொலிஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தகவல் கிடைத்தது.

இதையடுத்துச் சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர். பொலிஸாரின் விசாரணைகளில், மருமகனுக்கும் மாமியாருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது என்று தெரியவந்துள்ளது.

சந்தேகநபரான 29 வயதுடைய மருமகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இரத்தினபுரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.