கல்முனையில் இருந்து சென்ற வேன் விபத்து – ஒருவர் உயிரிழப்பு.. 9 ​பேர் காயம்..!

0
70

கல்முனையில் இருந்து இப்பலோகம நோக்கிச் சென்ற வேன் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து இப்பலோகம சந்திக்கு அருகில் உள்ள ஒரு விகாரையின் சுவரில் மோதியதில் ஒருவர் உயிரிழந்து, 9 பேர் காயமடைந்ததாக இப்பலோகம பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்றைய தினம் (12) இடம்பெறுள்ளது.

காகம பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய ஜபார்தீன் அப்துல் முனாஃப் என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

மேலும், விபத்தில் காயமடைந்த மூன்று பெண்கள், ஒரு குழந்தை மற்றும் ஐந்து ஆண்கள் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.