3 கிலோவிற்கும் அதிகமான ஹெராயின் போதைப்பொருளுடன் இளைஞன் கைது.!

0
97

3 கிலோ 655 கிராம் ஹெராயின் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெயங்கொட பொலிஸ் பிரிவின் புஞ்சி நைவலவத்த பகுதியில் வைத்து நேற்று (31) சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

இதன்போது ​​போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வேன் மற்றும் அளவீட்டு கருவிகளும் பொலிஸாரினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் புஞ்சி நைவலவத்த, எசெல்ல பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் என தெரியவந்துள்ளது.

வெயங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.