கிளிநொச்சி பகுதியில் 28 வயது இளைஞனுக்கு நடந்த கொடூரம்..!

0
242

கிளிநொச்சி – பூநகரியில் நேற்று மாலை வாள்வெட்டு,சம்பவ இடத்திலேயே பலியான இளைஞன்.

கிளிநொச்சி பூநகரி காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பூநகரி தம்பிராய் பகுதியில் நேற்று மாலை (31)ஆறு முப்பது மணி அளவில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் பூநகரி செம்பங்குன்று பகுதியைச் சேர்ந்த கந்தசாமி பிரணவன் (வயது-28)என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இனம் தெரியாதவர்கள் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.