மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான் பாலம் மந்திரியாறு பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை (20) இளம் குடும்பஸ்தரை முதலை இழுத்துச் சென்றுள்ளது.
மந்திரியாறு நீரோடை பகுதியில் மூவர் மீன்பிடித்துக் கொண்டிருந்த போதே முதலை இழுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முதலை பிடித்து இழுத்துச் சென்றவர் காத்தான்குடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய அழகுதுரை அழகேசன் எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்படுகிறது.
முதலை இழுத்துச் சென்ற இளம் குடும்பஸ்தரை தேடும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.
குறித்த மீனவரை மீட்கும் பணி இரவிலிருந்து முன்னெடுக்கப்படுகின் நிலையில் இன்று காலை வரை கண்டுபிடிக்க முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இவ்விடயம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.