மலையகத்தில் அதிர்ச்சி சம்பவம்.. 9 மாத கர்ப்பிணி மனைவியை கழுத்தை நெரித்து கொ*லை செய்த கணவன்..!

0
61

தெனியாய என்சல்வத்த கொஸ்குளுன தோட்டத்தின் நேற்று (18) இரவு பெண்ணொருவர் தூக்கில் தொங்கவிடப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்..

நேற்று மாலை 06.45 மணியளவில் தெனியாய என்சல்வத்த கொஸ்குளுன தோட்டத்தில் மனைவி தூக்குப் போட்டுக்கொண்டு இறந்துவிட்டதாக கணவன் வீட்டு வாசலுக்கு அருகில் வந்து கத்தியுள்ளார்.

ஊரார் உடனே 1990 அம்பியுலன்ஷ் மற்றும் தெனியாய பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளனர்.

உடனே ஊராருக்கு சந்தேகம் ஏற்படவே, கணவன் மாயமாக சென்று பொலிஸ் நிலையத்தில் ஆஜர் ஆகியுள்ளார்.

குறித்தப்பெண் இறந்துள்ளமை தெரியவந்துள்ள நிலையில் இந்த பெண் 9 மாதங்கள் கர்பிணியாக இருந்துள்ளதோடு இன்றைய தினம் (19.05.2025) அவர் பிரசவத்திற்காக வைத்தியசாலைக்கு செல்வதற்கு தயாராகிக்கொண்டு இருந்த நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது ஊர்மக்கள், மற்றும் பொலிசார் இணைத்து வயிற்றில் உள்ள குழந்தையை வைத்தியசாலைக்கு கொண்டுச்சென்று காப்பாற்ற முற்பட்ட போது குழந்தையும் இறந்துள்ளதாக வைத்தியசாலையின் வைத்தியர்கள் கூறியுள்ளனர்.

இந்த பெண்ணை கணவன்தான் கொன்று தூக்கில் மாட்டிவிட்டதாக அருகில் இருந்த 7 வயதுடைய மகன் மற்றும் குடும்பத்தார் தெரிவிக்கின்றனர்.

தற்போது சந்தேகத்தின் பேரில் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் நடந்த நாளில், இருவருக்கும் இடையே நிதி தகராறு தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது, மேலும் சந்தேக நபர், கர்ப்பிணியாக இருந்த தனது மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபர் தெனியாய, எனசல் வத்த பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில், சந்தேக நபரும் உயிரிழந்த பெண்ணும் திருமணமாகவில்லை என்றும், தெனியாய எனசல் வத்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட பெண், தெனியாய, எனசல் வத்தப்ப பகுதியைச் சேர்ந்த ஆர். இஷாந்தி என்ற 24 வயது பெண்ணாவார். (Photos-FB)