மகனை காப்பாற்ற முயன்ற தந்தைக்கு நடந்த சோகம்; நீராடச்சென்றவேளை துயரம்.!

0
29

பலாங்கொடை – சமனலவெவ பகுதியில் நீராடச்சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

பலாங்கொடை அளுத்நுவர பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்…

பெலிஹூல் ஓயா ஆற்றுக்கு நேற்று மாலை தந்தை ஒருவரும் அவரது மகனும் நீராடச்சென்றுள்ளனர்.

இதன்போது மகன் நீரில் மூழ்கிய நிலையில், அவரை காப்பாற்றுவதற்கு முற்பட்டபோது தந்தை நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

இந்தநிலையில், சமனலவெவ பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய தந்தை மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை சமனலவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.