துப்பாக்கிதாரிக்கு றிவோல்வரை வழங்கிய பெண் தொடர்பில் வெளியான தகவல்.!

0
532

கனேமுல்ல சஞ்சீவ கொலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு உதவ வந்த பெண்ணின் புகைப்படங்கள் தற்போது ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, அவர் தேவகே இஷாரா என்ற பெண் என்று கூறப்படுகிறது.

26 வயதான இந்த பெண் நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்தவர் என்று போலீசார் தெரிவித்தனர்.

துபாயில் தற்போது வசிக்கும் பாதாள உலகத் தலைவருடன் இணைந்து இந்த கனேமுல்ல சஞ்சீவவின் கொலையை அவள் திட்டமிட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.