அரச சேவை சம்பள உயர்வுக்காக 90 பில்லியன் ரூபா ஒதுக்கீடு.!

0
301

அரச சேவை சம்பள உயர்வுக்காக எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் 90 பில்லியன் ரூபாவை ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

தம்புத்தேகம பகுதியில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் ஆனந்த விஜேபால, அரச சேவையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் எதிர்காலத்தில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டார்.

இதேவேளை, எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் அரசு ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு செய்யப்படுமென நிதி அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனடிப்படையில், தற்போதுள்ள சம்பள அளவுகளின்படி ரூபா 7,500 முதல் ரூபா 10,000 வரையிலான தொகை அடிப்படை சம்பளத்தில் சேர்க்கப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.