மட்டக்களப்பில் விபத்தில் சிக்கிய பல்கலைக்கழக மாணவர்கள்.. CCTV வீடியோ.!

0
400

கல்முனை இருந்து கொழும்பு நோக்கி சென்ற தனியார் சொகுசு பேருந்து வந்தாறுமூலை பல்கலைக்கழகம் அருகே திடீரென குறுக்கறுத்த ஆட்டோ ஒன்றுடன் மோதி விபத்து நடந்துள்ளது.

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் பயணித்த ஆட்டோ ஒன்றே நேற்று இரவு இவ்வாறு மோதி விபத்திற்கு உள்ளாகியிருக்கிறது.

இதன்போது படுகாயமுற்ற ஆட்டோ சாரதி உட்பட காயமுற்ற மாணவர்கள் மாவடிவேம்பு செங்கலடி மற்றும் ஏறாவூர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏறாவூரில் அனுமதிக்கப்பட்ட 2 மாணவர்கள் உடனடியாக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு தீவிர சிகிற்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒருவரின் நிலை கவைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த CCTV காட்சி வெளியாகி உள்ளது, கீழே இணைக்கப்படுள்ளது.