இறப்பர் தோட்டத்திற்குள் வைத்து பெண்ணொருவருக்கு நேர்ந்த சம்பவம்.!

0
284

இரத்தினபுரி – கிரியெல்ல பகுதியிலுள்ள பெண் ஒருவரை இறப்பர் தோட்டத்தில் வைத்து கூட்டு பாலியல் வன்புனர்வுக்கு உட்படுத்திய இருவர் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

21 மற்றும் 31 வயது மதிக்கதக்க இருவரும் மேலும் சிலருடன் இணைந்து கடந்த 9 ஆம் திகதி இந்த கூட்டு பாலியல் வன்புனர்வை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளர்

கிரியெல்ல பகுதியைச் சேர்ந்த 39 வயதான குறித்த பெண்ணை பலவந்தமாக கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகளை கிரியெல்ல பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.