ஓட்டமாவடியில் இரு ஓட்டோக்கள் நேருக்கு நேர் மோதி விபத்து.!

0
125
Common Photo

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடியில் இடம்பெற்ற ஓட்டோ விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்துச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (03) மாலை ஓட்டமாவடி மீன் சந்தைக்கு முன்பாக வைத்து இடம்பெற்றுள்ளது.

பிரதான வீதியில் பயணித்த இரு ஓட்டோக்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது .

இந்த விபத்தில் ஓட்டோவில் பயணம் செய்த மூவர் காயங்களுக்குள்ளான நிலையில் சிகிச்சைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து நடந்த இடத்திற்கு வருகை தந்த வாழைச்சேனை போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.