கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி – சாரதிக்கு நேர்ந்த சோகம்.!

0
137
Common Photo

களுத்துறை – கந்த பன்சல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து நேற்றைய தினம் இடம்பெற்றதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.

கந்த பன்சல திசையிலிருந்து ஹொரணை பிரதான வீதி நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.

இதில் பலத்த காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவத்தில் 62 வயதுடைய விலேகொட பகுதியைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, களுத்துறை வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.