106 வயதில் தனது வாக்கை செலுத்திய முதியவர்.. குவியும் வாழ்த்துக்கள்.!

0
167

106 வயது முதியவர் யோன் பிலிப் லூயிஸ் இன்று (14) பாராளுமன்றத்தேர்தலுக்கான தமது வாக்கை திருகோணமலை புனித மரியாள் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் செலுத்தினார்.

யாழ்ப்பாணத்தில் 18.11.1918 இல் தாம் பிறந்து, தமது 22 வயதில் திருகோணமலைக்கு வந்து தொடர்ந்து அங்கே வாழ்ந்து வருவதாகவும், இலங்கையின் பாராளுமன்ற தேர்தல்கள் அனைத்திலும் தாம் வாக்களித்துள்ளதாகவும் அவர் கூறினார்.