இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தும் , வேனொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளானதில், வேனின் சாரதி படுகாயமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (12) பிற்பகல் இடம்பெற்றதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர் .
கொழும்பு- ஹட்டன் பிரதான வீதியில் ஸ்தெடன் தோட்ட பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்தில் படுகாயமடைந்த சாரதி, வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்கான நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கினிகத்ஹேனவில் இருந்து ஹட்டன் நோக்கி அதிவேகத்தில் பயணித்த வேன், அதே திசையில் பயணித்த முச்சக்கரவண்டியை, கவனயீனமாக முந்திச் செல்ல முயன்ற போது எதிர் திசையில், ஹட்டனில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
வேன் சாரதியின் அதிவேகமே இந்த விபத்திற்கு காரணம் என கூறப்படுகின்றது.
பேருந்துக்கும் வேனுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த ஹட்டன் போக்குவரத்துப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.















