காட்டு யானைகள் மோதியதில் தடம் புரண்ட ரயில்.!

0
201

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு யானைகள் உயிரிழந்தன.

காட்டு யானைகள் மோதியதில் மூன்று எரிபொருள் தாங்கிகள் மற்றும் ஏனைய பெட்டிகளுடன் இயந்திரம் தடம் புரண்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

விபத்து காரணமாக மட்டக்களப்பு தொடருந்து பாதையில் தொடருந்து போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகத் தொடருந்து திணைக்களம் மேலும் தெரிவிக்கின்றது.