14 வயது சிறுமி கர்ப்பம் – தாயின் கள்ளக்காதலன் கைது.!

0
155

14 வயது சிறுமி ஒருவர் கருத்தரித்த சம்பவம் தொடர்பில் சிறுமியின் தாயின் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் அம்பாறை, தெஹியத்தகண்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

52 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தெஹியத்தகண்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமி பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.