கொழும்பில் குளிப்பதை படம்பிடித்த மருதமுனை நபருக்கு விளக்கமறியல்

0
2

அண்டை வீட்டுப் பெண் குளிப்பதை ரகசியமாகக் காணொளி (Video) பதிவு செய்து, அதனை அப்பெண்ணின் தோழிக்கு அனுப்பியதாகக் கூறப்படும் நபரை, வரும் மே மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிபதி அசங்க எஸ். போதரகம இன்று (23) உத்தரவிட்டார்.

கொழும்பு 7 பகுதியில் வாடகைக்கு வசித்து வரும் இளம் பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், மருதமுனை பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபர் கறுவாத்தோட்டம் (Cinnamon Gardens) பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.