துப்பாக்கி வெடித்ததில் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மின்சாரத் தொழில்நுட்பவியலாளர் உயிரிழப்பு.!

0
6

பலங்கொடை, சமனலவெவ பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றில் வைக்கப்பட்டிருந்த கட்டுத் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சமனலவெவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வீட்டின் அருகே உள்ள காணியில் இருந்த இந்த துப்பாக்கி வெடித்ததில், குறித்த நபர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 42 வயதுடைய நபர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நபர், சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மின்சாரத் தொழில்நுட்பவியலாளராகப் (Electrician) கடமையாற்றி வந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பலங்கொடை, சமனலவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.