யாழிலிருந்து ஜேர்மனி சென்ற இளைஞன் தற்கொலை.. கதறும் உறவுகள்.!

0
86

யாழ்ப்பாணம் உரேழு கிழக்கு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இரண்டு வருடங்களுக்கு முன் ஜேர்மனி சென்று அங்கு அகதி முகாமில் பதிவு செய்து முகாமில் தங்கவைக்கப்பட்டு இருந்தார்.

ஆனால் விசாஇன்மை, வேலைஇன்மை, தனிமை, மொழிப் பிரச்சனை, நண்பர்கள் இன்மை போன்ற காரணங்களினால் இளைஞர் குறித்த மனவிரக்திக்குள்ளாகி அடிக்கடி குடும்பத்தினருக்கு தான் மீண்டும் ஊருக்கு வர போகின்றேன் என்று கூறி வந்ததாக கூறப்படுகின்றது.

குடும்பத்தினரும் போன காசை உழைச்சிக்கொண்டு வா என்று ஆறுதல் கூறியும் இளைஞர் மனவிரக்திக்கு சென்று இன்று செவ்வாய் அதிகாலை 2:30 முகாமில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார் என கூறப்படுகின்றது.

சம்பவத்தில் யாழ்ப்பாணம் – உரேழு கிழக்கு பகுதியைச் சேர்ந்த புஸ்பராசா சுகன் (வயது-25) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

சடலம் உடற்கூற்று சோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரனைகளை அவ் பிரதேச ஜேர்மனி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.