25 கோடி ரூபா நன்கொடை செய்த முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக குமாரதுங்க.!

0
93

இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான பண்டாரநாயக்க நினைவு தேசிய அறக்கட்டளை நிதியத்தினால், சமீபத்திய பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களின் மீட்பு மற்றும் மீள் கட்டமைப்பு பணிக்காக நிறுவப்பட்ட அரசாங்க நிதிக்கு ரூபா 250 மில்லியன் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிதியை பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் சந்திரிக்கா அம்மையார் நேற்று (08) வழங்கி வைத்தார்.

இந்த உதவிக்கு ஏராளமானோர் வாழ்த்துக்களை தெரிவித்து வருவதை காணக்கூடியதாக இருக்கின்றது.

ராஜபக்ச குடும்பம்பத்தினர் ஏன் உதவவில்லை என சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்படுள்ளது.