நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்துள்ள அனர்த்த நிலைமை காரணமாக ஏற்பட்ட அனர்த்த மரணங்களின் எண்ணிக்கை 638 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இன்று (09) காலை 09.00 மணிக்கு வெளியிடப்பட்ட சமீபத்திய அறிவிப்பின் படி, 191 பேர் தொடர்ந்தும் காணாமல் போயுள்ளனர்.
501,958 குடும்பங்களைச் சேர்ந்த 1,737,330 பேர் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.










