தாயின் விபரீத முடிவால் பறிபோன குழந்தைகளின் உயிர்கள்.. இலங்கையில் நடந்த சோகம்.! Video

0
267

தாயின் விபரீத முடிவால் குழந்தைகள் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

மொரட்டுவையிலிருந்து அனுராதபுரத்திற்கு வந்த ஒரு தாய் தனது இரண்டு குழந்தைகளுடன் மல்வத்து ஓயா ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றதை அடுத்து காணாமல் போன இரண்டு குழந்தைகளில் ஒருவரான சிறுமியின் சடலம் நேற்று (7) அனுராதபுரம் ‘மல்வத்து ஓயா லேன்’ சாலைக்குச் செல்லும் புதிய பாலத்திற்கு அருகில் கண்டெடுக்கப்பட்டதாக அனுராதபுரம் பொலிஸ் உயிர்காப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டபோது, ​​அவரது இடது கை மற்றும் இடது கால் காணாமல் போயிருந்ததாகவும், அது முதலைகள் அல்லது பாம்புகளால் தின்றிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்…

கடந்த ஏழு நாட்களுக்கு முன்பு, 2 ஆம் தேதி, மொரட்டுவவின் அகுலான பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய இரண்டு குழந்தைகளின் தாய் ஒருவர் தனது எட்டு வயது மகன் மற்றும் நான்கரை வயது மகளுடன் அனுராதபுரத்திற்கு வந்து, அனுராதபுரத்தில் உள்ள பண்டாரநாயக்க மாவத்தையில் உள்ள மிஹிந்துபுர பாலத்திலிருந்து மல்வத்து ஓயாவில் குதித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

அன்று காலை, மிஹிந்துபுர பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞர், மல்வத்து ஓயாவில் பெண், நீரில் மூழ்குவதை கண்டு அப்பகுதிவாசிகளுடன் சேர்ந்து, அவரை தண்ணீரில் இருந்து வெளியே எடுத்தார். பின்னர் அந்தப் பெண் இரண்டு குழந்தைகளின் தாயாக அடையாளம் காணப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட பெண் அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, காவல்துறையினரால் காவலில் எடுக்கப்பட்டார்.

இந்நிலையில் தனது மகள் கடந்த 1 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறி, தனது 8 வயது மகனையும் 4 வயது மகளையும் அழைத்துக்கொண்டு நீரில் குதித்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் காணாமல் போன மற்றும் இறந்த ஆண் மற்றும் பெண் குழந்தைகளின் உடல்கள் இரண்டு சந்தர்ப்பங்களில் பள்ளத்தில் சிக்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த மரணங்கள் குறித்து அனுராதபுரம் கூடுதல் நீதவான் மற்றும் கூடுதல் மாவட்ட நீதிபதி பி.எச்.டபிள்யூ.டி.எல். சமரசிங்க நீதிவான் விசாரணை நடத்தினார். உடல்கள் குறித்து பிரேத பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டது.

இதனையடுத்து குழந்தைகளைன் தாயார் செனடி ஸ்ரீமா விதான (40) கொலைக் குற்றச்சாட்டில் போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இந்த மாதம் 17 ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

நீரில் மூழ்கிய தாயை காப்பாற்றும் பொதுமக்கள் – வீடியோ