குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட 10 பேருக்கு மரண தண்டனை.!

0
175

கொலை தொடர்பில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட பத்து பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

எம்பிலிப்பிட்டிய மேல் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

எம்பிலிப்பிட்டிய முல்லகசியாய பகுதியில் 2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொடூரமான கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கில், குற்றம் நிரூபிக்கப்பட்ட 3 பெண்கள் உள்ளிட்ட 10 பேருக்கு எம்பிலிப்பிட்டிய உயர்நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (நவம்பர்-24) மரணதண்டனை விதித்து தீர்ப்பை வழங்கியது.