யாழில் 1000 போதை மாத்திரைகளுடன் நால்வர் கைது.!

0
58

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இன்றையதினம் 1000போதை மாத்திரைகளுடன் நால்வர் யாழ்ப்பாணப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி போதைப்பொருட்கள் பாடசாலை மாணவர்களுக்கு விற்பனையாகவிருந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாண பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் அதிகாரி செனவிரட்ன தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்படி கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது