பிரான்சில் இருந்து வந்து திருமணம் செய்த இளம் குடும்பஸ்தர் வெட்டிக் கொலை.!

0
261

யாழ்ப்பாணம் – வடமராட்சி கரணவாய், கூடாவளவு பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

கொலை செய்யப்பட்டவர் 29 வயதுடைய ராஜகுலேந்திரன் பிரிந்தன் என்றும் அவர் பிரான்ஸ் நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவிடத்தில் இருந்து இரண்டு சந்தேக நபர்கள் செல்லும் காட்சி அப்பகுதியில் பதிவாகியுள்ளது.

யாழ் நெல்லியடி குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வரகின்றனர்.