முச்சக்கரவண்டி ​- வேன் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.!

0
88

கொழும்பிலிருந்து தலவாக்கலை நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியும் ஹட்டனில் இருந்து பொல்பிட்டிய வக்கம நோக்கிச் சென்ற வேனும் நேருக்கு நேர் மோதியதில் நேற்று திங்கட்கிழமை (17) விபத்துக்குள்ளாகியது.

குறித்த விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் உயிரிழந்ததாக பொல்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த நபர் கொழும்பு பகுதியைச் சேர்ந்த 53 வயதான எச்.எம். இந்திக பிரியகுமார ஆவார்.

அதிக வேகத்தில் பயணித்த முச்சக்கர வண்டியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் வேனுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

இந்த விபத்தில் முச்சக்கர வண்டிக்கு பலத்த சேதம் ஏற்பட்டதாகவும், வேன் ஓட்டுநர் கைது செய்யப்பட்டதாகவும் பொல்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட ஓட்டுநரை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.