அம்பலங்கொடை நகர சபைக்குச் சொந்தமான பிரதான நூலகத்துக்கு முன்பாக நேற்று (04) காலை துப்பாக்கிச் சூடு நடத்தி இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
அதன்படி, இவ்வாறு கொல்லப்பட்டவர் அம்பலங்கொடை, போரம்ப பிரதேசத்தைச் சேர்ந்த வருஷவிதான மிரந்த என்ற 54 வயதான நபர் என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அம்பலங்கொடை நகர சபை சார்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பட்டியலில் இவர் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், இவர் வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் குற்றவாளியான ‘கரந்தெனிய சுத்தா’ என்ற நபரின் மைத்துனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், நேற்று கொல்லப்பட்ட மிரந்த எந்தவொரு மனிதக் கொலைக்கும் குற்றம் சாட்டப்பட்டவர் அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கரந்தெனிய சுத்தாவின் தரப்பை பழிவாங்கும் நோக்கில், மஹதுர நளினின் தரப்பினரால் மிரந்தவின் கொலை நடத்தப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.









