நேற்று (12) பூநகரி பொலிஸ் பிரிவில் பரந்தன் பூநகரி பிரதான வீதியில் 20வது கிலோமீட்டர் தூண் அருகே வீதியில் பயணித்த ஒருவர் மீது வாகனம் மோதியது.
விபத்துக்குப் பிறகு குறித்த வாகனம் நிறுத்தாமல் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில், விபத்தில் சிக்கிய நபர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் பூநகரி பகுதியைச் சேர்ந்த 82 வயதானவர் என தெரியவந்துள்ளது.
விபத்தை ஏற்படுத்திய வாகனம் மற்றும் சாரதியை கைது செய்ய பூநகரி பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.