வீட்டில் இருந்த இளம் தம்பதியினர் ப.டு.கொ.லை – 4 பேர் கைது.!

0
68

ஹுங்கம, வடிகல பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கூரிய ஆயுதங்களால் தம்பதியினர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இன்று (07) காலை கைது செய்யப்பட்டதாக ஹூங்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர். கைதான பிரதான சந்தேக நபர் “அதுபெலேன பிந்து” என்ற புனைப்பெயரில் அறியப்படுகிறார்.

அவர் அந்த பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர் என்பதும் தெரியவந்துள்ளது.

ஹுங்கம, வடிகல பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று அதிகாலை 12.45 மணியளவில் இரட்டைக் கொலை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணையில் உயிரிழந்தவர்கள் 28 வயதுடைய ஒரு ஆணும், மற்றையவர் அவரது மனைவி என்பதும் தெரியவந்துள்ளது.

சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளர் தற்போது சிறையில் இருப்பதாகவும், தம்பதியினர் தற்காலிகமாக அந்த வீட்டில் வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து ஹுங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.