நாடு பூராகவும் விசேட சோதனை நடவடிக்கை.!

0
27

நாடு முழுவதும் நடத்தப்படும் விசேட குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் கீழ், பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய மேலும் 13 நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்நடவடிக்கையின்போது 28,140 நபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 626 நபர்களும், 246 பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மேலும், குடிபோதையில் மற்றும் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காக 54 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.