தங்காலை போதைப்பொருள்; லொறி உரிமையாளர்கள் கைது.!

0
32

தங்காலையில் திங்கட்கிழமை (22) அன்று 3 லொறிகளில் இருந்து மீட்கப்பட்ட மொத்த போதைப்பொருள் அளவு 705 கிலோ ஆகும். 3 லொறிகளின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்கள் கல்கிஸ்ஸை, எல்பிட்டிய மற்றும் மீட்டியாகொட பொலிஸ் நிலையங்களால் கைது செய்யப்பட்டனர்.

இலங்கையில் போதைப்பொருள் வர்த்தகத்தை முன்னெடுக்கும் ஒருவருக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது.

வெளிநாட்டிலிருந்து போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள ‘உனாகுருவே சாந்த’ என்ற குற்றவாளியின் ஊடாக இந்த போதைப்பொருட்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் நடத்திய விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.