ஓமந்தையில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்..!

0
114

ஓமந்தையில் ரயில் மோதி ஒருவர் கால் துண்டிக்கப்பட்ட நிலையில் படுகாயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்துச் சம்பவம் நேற்று இரவு 11.15 மணியளவில் வவுனியா -ஓமந்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு புறக்கோட்டை நோக்கி பயணித்த ரயில் மோதியதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு புறக்கோட்டை நோக்கி பயணித்த ரயில் வவுனியா – ஓமந்தைப் பகுதியில் பயணித்த வேளையிலேயே ஒருவர் மோதுண்டு படுகாயமடைந்துள்ளார்.

ரயில் மோதி படுகாயமடைந்த நபர் இடது கால் துண்டிக்கப்பட்ட நிலையில் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Photo-FB