யாழில் போதை மாத்திரைகளுடன் மூவர் கைது..!

0
133

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்புத்துறை பகுதியில், போதை மாத்திரைகளை விற்பனை செய்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் பொலிஸ் குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் போதை மாத்திரைகளை நீண்ட நாட்களாக விற்பனை செய்த குறித்த மூவரும் நேற்று (20) யாழ்ப்பாணம் பொலிஸ் போதை பொருள் ஒழிப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்

இதன் போது 180 போதை மாத்திரைகளுடன் 18, 24 ,22 வயதுடைய யாழ்ப்பாணம் கொழும்புத்துறையை மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.