யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருநகர் பகுதியில் யாழ்ப்பாணம் பொலிஸ் குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் வியாழக்கிழமை (18) கைது செய்யப்பட்டுள்ளார்
இதன் போது 120 மில்லி கிராம் நிறையுடைய கொக்கெயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம் குருநகரை சேர்ந்த 36 வயதுடைய நபராவார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.