இன்டர்போல் சிவப்பு அறிவிப்பு;15 இலங்கையர்கள் கைது.!

0
267

இன்டர்போல் சிவப்பு அறிவிப்புகளுக்கு உட்பட்ட பதினைந்து இலங்கை பாதாள உலக உறுப்பினர்கள் ரஷ்யா, ஓமான், துபாய் மற்றும் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

அந்தந்த நாடுகளில் நடந்து வரும் சட்ட நடவடிக்கைகள் முடிந்ததும், இந்த நபர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக அவர் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.