பசறையில் வீடொன்றில் 2 சடலங்கள் மீட்பு..!

0
197

பதுளை – பசறை 10ஆம் கட்டை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து 2 சடலங்கள் இன்று (31) மீட்கப்பட்டுள்ளன.

பசறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய, குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

28 மற்றும் 33 வயதுகளை மதிக்கத்தக்க இளைஞர்களே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சடலங்கள் மீது எவ்வித காயங்களும் காணப்படவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

சம்பவம் தொடர்பில் பசறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.