அருகம் குடாவில் இரு தரப்பினருக்கு இடையில் வாக்கு வாதம் – 2 இஸ்ரேலிய பிரஜைகள் கைது.!

0
221

அருகம் குடாவில் ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர் மற்றும் அவரது மனைவியைத் தாக்கியதாகக் கூறப்படும் இரண்டு இஸ்ரேலிய பிரஜைகள் சனிக்கிழமை (31) பொத்துவில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

தம்பதியினர் தங்கள் வாகனத்தில் பயணித்தபோது, 26 வயதுடைய இரண்டு வெளிநாட்டினர் வீதியை மறித்ததால் இந்த சம்பவம் நடந்ததாக பொலிஸால் தெரிவித்தனர். இதன்போது, இரு தரப்பினருக்கும் இடையில் வாக்கு வாதம் ஏற்பட்ட பின்னர் அது கைகலப்பாக மாறியுள்ளது.

பாதிக்கப்பட்ட கணவன் மற்றும் மனைவி காயமடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.