வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்த முயன்ற மூவர் கைது..!

0
5

45.8 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்த முயன்ற மூன்று இலங்கையர்கள் இன்று (27) கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூன்று பேரும் பொருட்களில் வெளிநாட்டு சிகரெட்டுகளை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

‘கிரீன் சேனலை’ பயன்படுத்த முயன்ற மூவரையும் இலங்கை சுங்க அதிகாரிகள் கைது செய்தனர்.

24, 28 மற்றும் 30 வயதுடைய சந்தேக நபர்கள் துபாயில் சிகரெட்டுகளை வாங்கி டோஹா வழியாக இலங்கைக்கு கடத்தியதாக கூறப்படுகிறது.