வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த ஒரு வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம்.!

0
78

இந்தியாவின் திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கம் அருகே தரையில் ஊர்ந்து சென்ற வண்டை எடுத்து விழுங்கிய ஒரு வயது பெண் குழந்தை உயிரிழந்துள்ளது.

வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை வண்டைப் பிடித்து விழுங்கியதால், மூச்சுக்குழாயில் வண்டு கடித்து உயிரிழப்பு ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குழந்தை தொடர்ந்து அழுது கொண்டு இருந்ததால் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.