உணவகத்தில் நடந்த தாக்குதலில் கணவன் உயிரிழப்பு.. மனைவி படுகாயம்.!

0
88

துனகஹா-கொடிகமுவ சாலையில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்த ஒருவர் கம்பஹா பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக திவுலபிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

உணவகத்தில் இறந்தவரின் மனைவிக்கு நடந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரிக்கச் சென்றபோது, உணவகத்தின் உரிமையாளரும் மேலும் இரண்டு பேரும் தம்பதியினரைத் தாக்கியதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

காயமடைந்த மனைவி திவுலபிட்டிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இறந்தவர் மடம்பலே பகுதியைச் சேர்ந்த 46 வயதானவர் என தெரியவந்துள்ளது.

தலைமறைவான சந்தேக நபர்களைக் கைது செய்ய விசாரணைகள் நடந்து வருகின்றன.